நானும் ஒருத்தியாய்……………

நானும் ஒருத்தியாய்……………!!!


உன் கருணை பார்வையும்
இரக்கமற்றதானதோ இறைவா…………..

இரக்கமற்ற அண்டையரின் வார்த்தைகள்
கூரிய ஊசியாய் தைக்கிறது இதயத்தை…………..

இரக்கமானவன் இறைவன்
என்றெண்ணியே கையேந்தி நிற்கிறேன் உன்னிடம்………………..

முதிர்கன்னி என்றவரின் வாய்பொத்திய
என்னவானால்
மலடி என்றவருக்கு மாற்று வார்த்தைகூற இயலாதவனாய்………….

ஏனோ எங்கள் ஏக்கம்
உம்செவிக்கு எட்டாமல்……………

ஏமாற்றத்துடனே திரும்புகிறேன் இன்றும் ……………

மனத்தளவு வலியும்
கையளவு ஏமாற்றமும் சுமந்து ,
ஊர் வாய்க்கு அவலாய் போன பெண்களில்
நானும் ஒருத்தியாய்……………………!!!

எழுதியவர் : ரேவதி மணி (28-Mar-17, 11:23 am)
சேர்த்தது : ரேவதி மணி
பார்வை : 197

மேலே