தெய்வக்குத்தம் ஆகிடுச்சி

தெய்வக்குத்தம் ஆகிடுச்சி
*******************************
 
ஒரு ஊருல
ரெண்டு வண்டிமட்டும் போய்ட்டு வரக்கூடிய...
சின்ன சாலை ஒன்னு இருக்கு..

திடீர்னு ஒரு பெரிய வண்டி,
திரும்பனும்னாக் கூட
ரோட்டுக்கு இரண்டு பக்கம் இருக்குற
மரம் அதுக்கு இடையூரா இருக்கும்...!!

அத நாலுவழி சாலையா மாத்த
அரசாங்கம் முடிவு பண்ணியது...

ரோட்டுக்கு ரெண்டு பக்கமும் விவசாய நிலம்...
அத அகலப்படுத்தி ரோட்ட போடனும்...
அதுக்கு கிராம மக்கள் ஒன்னும் சொல்லல...

காரணம்... நிலத்துக்கு சொந்தக்காரங்க,
வெறும் நாலஞ்சு பேர்தான் என்பதால்...

கடைசில அந்த சாலைக்கு நடுவுல
ஊர் பொதுக் கோவில் ஒன்னு இருந்தது...
அத இடிச்சி தான்
ரோடு போடா வேண்டிய நிலை...

இல்லைனா கோவில்ல இருந்து
ஒரு கிலோமீட்டர் சுத்திதான் போடா முடியும்னு...
அதுக்கு செலவும் அதிகமாகும்...

ஆனா அதுவரைக்கும் அமைதிகாத்த மக்கள்...
கோவில் என்றதும் ஒன்று கூட ஆரம்பிச்சிட்டாங்க...

கலெக்டர் அலுவலகத்துக்கு
முன்னாடி நின்னு போராடம் பண்றாங்க...

அப்ப ஒரு பெருசு சொல்லுது...

“நாங்கல்லாம் விவசாயிங்க...
வருஷ வருஷம் அந்த கோவில்ல
திருவிழா நடக்குரதுனால தான்...

எங்க ஊருல மழை தண்ணி பேயுது..”
நீங்கவாட்டுக்கு இடிச்சி
அத தெய்வக்குத்தமாக்கி...
எங்க பொழப்புல..."

ஊரெல்லாம் கூடி வந்ததுல்னால
சாலை ஒரு கிலோமீட்டர் சுத்தி போடப்பட்டது...

ஆனா இன்னைக்கு
இந்த ரோட்ட போட்டடு நாலு வருசமாச்சி....

யாரு கண்ணு பட்டுச்சோ தெரியல...

மழை தண்ணி இல்ல...
விவசாயம் செத்துப்போச்சி...

இப்ப அதே பெருசு
கோவில் வாசல்ல நின்னு புலம்புது

அன்னைக்கு எங்க இடத்தைஎல்லாம் கொடுத்து...
உன் கோவில இடிக்காம பார்த்துக்கிட்டோமே...
வருஷ வருஷம் உனக்கு திருவிழா நடத்துரோமே...
உனக்கு இரக்கமே இல்லையா...
இன்னைக்கு நாங்க மழை தண்ணி இல்லாம சாகுரோம்னு...

இவர் எவ்வளவு புலம்பியும்
இவர் கேள்விக்கு... சாமி பதில் சொல்லல...!

எப்படி சொல்லும்...?

வெறும் கட்டிடத்தை காப்பாத்த போராடின இவங்க..

சாலைக்கு ரெண்டு பக்கம் வளர்ந்து நின்ன
கடவுள வெட்ட விட்டுட்டாங்களே...

அப்ப தெய்வக்குத்தம் ஆகத்தான் செய்யும்...!!!

 
இவண்
✒க.முரளி (spark MRL K)

எழுதியவர் : க.முரளி (28-Mar-17, 9:00 pm)
பார்வை : 758

மேலே