படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் படத்திற்கு ஹைக்கூ கவிஞர் இரா இரவி

படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் !

படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

யானைக்கு மட்டுமல்ல
மனிதனுக்குப் பிடித்தாலும் ஆபத்து
மதம் !

அன்று நெறி
இன்று வெறி
மதம் !

அபினைவிடக் கொடியது
ஐந்தறிவாக்குவது
மதம் !

மனிதனை
மிருகமாக்கும்
சாதி வெறி !

சங்கம் வளர்த்த மதுரையில்
சங்கம் இல்லாத சாதி இல்லை
அவலம் !

எழுதியவர் : கவிஞர் இரா .இரவி (30-Mar-17, 12:50 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 121

சிறந்த கவிதைகள்

மேலே