என்றும் என் நினைவில்
காதல் ..
கண்ணில் மலர்ந்தது
கடிதத்தில் பறந்தது
காற்றிலும் கலக்கிறது
இன்று
அலை கற்றையாய்.....
உன்னை எண்ண எண்ண
எழிலோவியங்களான உன்
நியாபகங்கள்
என் மனதில்
தகதிமிதா தாளம் போட்டு
தத்தளிக்கின்றன
இதயத்தில் மலர்ந்த
நம் காதல்
இனி ,
இணையத்தில் பயணிக்க
இருக்கிறது
நம் சுவாசிக்கும் கற்று வேறாயினும்
அது உச்சரிக்கும் இசை ஒன்று தான்
நாம் பயணம் செய்யப்போகும்
பாதை வேறாயினும்
அதில் பயணம் செய்ய போகும்
பருவங்கள் ஒன்று தான்
காலங்கள் மாறினாலும்
என் கனவுகள் மாறாது
உன் நினைவுகளும் மறையாது
உனக்கான வரைந்த இந்த மடல்
காத்திருக்கும் உன் விழிகள் என்னை தழுவும் வரை ..???