நியம்

நியம்
மக்களை கொன்று
மக்களாட்சி நடக்கிறது
இந்துகோவில் நொருக்கி
மதவொழிப்பு நடக்கிறது
அகிம்சை காத்திட
ஆயுதம் தீட்டப்படுகிறது
மன்னிப்பு கேட்கப்படுகின்றன
உயிர்பறித்த உறவுகளிடம்
ஊரடங்கு உத்தரவில்
சமாதானக்கொடி பறக்கிறது
சுதந்திர அறிக்கையில்
சுடுவதற்கான கட்டளை
போர் முடிவு பறைசாற்றி
ஊரெலாம் இராணுவமுகாம்
உணர்வுகள் உந்தின
உள்ளங்கள் ஒதுங்கின
தவறென புரிந்தும்
தட்டிக்கேட்க இயலாமை
தப்பென அறிந்தும்
தண்டிக்க முடியாமை
வீரமூட்டிய தாய்மண்
வரம்கொடுக்க மறந்தாளே
இனவாதியல்ல நான் இதயவாதி
மதவெறியல்ல இது என் மனவெறி

எழுதியவர் : S.Jeyarani (2-Apr-17, 7:52 am)
பார்வை : 237

மேலே