பொதிகைத் தமிழ்வந்தது தென்றலுடன்

பொழுது புலர்ந்தது புன்னகையுடன்
--------------------------புன்னகை மலர்ந்தது உன்னுடன்
விழுது விட்ட ஆலமரம்
--------------------------அசைந்தது பசுமை இலைகளுடன்
தொழுது வணங்கும் ஆலயத்தின்
--------------------------வாசல் திறந்தது மணிஓசையுடன்
அழுக்கில்லா தூயசிறகு விரித்து
--------------------------பறவைகள் பறந்தது காலையொளியுடன்
எழுது எழுதுஎன்று கணினி
--------------------------கைபிடித்து இழுக்குது எழுத்துடன்
பழுதுஇல்லா பாவைநீவிரலில் முத்தமிட
-------------------------- பொதிகைத் தமிழ்வந்தது தென்றலுடன் !

எழுதியவர் : கவின் சாரலன் (2-Apr-17, 8:54 am)
பார்வை : 128

மேலே