சாதனை

உன் கட்டழகில் மயங்கி
கற்பனையைத் தட்டிவிட்டேன்
கருத்தாய் பிறந்தன
கவிதை வரிகள்
உன் இதழோரம் தொலைந்து போன
வெண்முத்தைத் தேட
கடல் நீரை வடிக்கலானேன்
கணத்தில் வடிந்தது
கடைசியில் கண்டெடுத்தேன்
உன் பூவிதழ் புன்னகையில்
உன் கூந்தல் முடி கொண்டு
கட்டி இழுத்தேன் வெண்ணிலவை
தட்டாமல் வந்தேன் வாசலில் நின்றது
உன் நினைவைத் தாங்கி
சூரியனை தொட்டுப்பார்த்தேன்
சுடவில்லை குளிர்ந்தது
மின்னலை வீட்டிற்கு
மெழுகுவர்த்தியாக்கினேன்
விண்ணினைச் சுருட்டி
விரலுக்குள் அடக்கினேன்
இத்தனையும் சாதித்த நான்
உன் உள்ளக்கதவைத் திறக்க
முயன்று முயன்று
தோற்றுப்போனேன்
இன்று வந்த கனவிலும் !!!

எழுதியவர் : அசோகன் (5-Apr-17, 10:31 pm)
சேர்த்தது : சாலூர்- பெஅசோகன்
Tanglish : saathanai
பார்வை : 73

மேலே