நீயின்றி நானில்லை

கண்ணும் நீ
கண்ணின்ற மணியும் நீ
மண்ணும் நீ
மழை தரும் முகிலும் நீ
விண்ணும் நீ
விடிகின்ற பொழுதும் நீ
எண்ணம் நீ
அதில் தோன்றும் எழுத்தும் நீ
உயிரும் நீ
உடலூறும் குருதியும் நீ
இவ்வுலகில் எல்லாம் நீ
எனை ஈன்ற தாயே நீ

எழுதியவர் : அசோகன் (5-Apr-17, 10:04 pm)
சேர்த்தது : கவிஞர் பெஅசோகன்
Tanglish : neeyindri naanillai
பார்வை : 171

மேலே