நீதான் என் உள்ளத்தில் என்னவளே

என் இதயத்தில் உன்னை
பூட்டிவைத்தேன் கண்ணே
பூஜைக்குவந்த பொன்னிலவாய்
உன்னை; இன்னும் நீ இதை
நம்பவில்லை என்றால்
நான் வேறென்ன செய்யமுடியும்
இதோ என் நெஞ்சை
உன்னைப் பூஜிக்கும் நெஞ்சை
கிள்ளி வீசி எரிந்தாலும்
அது துள்ளும் போதும்
உஷா என்று உன் பெயரையே
சொல்லி அல்லவா துள்ளும்
ஆடி அடங்கும் முன்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (6-Apr-17, 10:10 pm)
பார்வை : 270

மேலே