வாழும்வரை வசந்தமே

​புகுந்தது புதியமலர் ​
புக்ககத்தில் !
இணைந்தது இதயம்
இல்லறத்தில் !

மாறுகின்ற மணக்கோலம்
மாற்றிவிடும் வசிப்பிடத்தை !
பாய்கின்ற அன்புவெள்ளம்
நிறைத்துவிடும் இதயத்தை !

உறவுகள் மேம்படும்
உள்ளங்கள் ஒன்றினால் ...
வாழும்நிலை மேலோங்கும்
வாய்ச்சொல் செயலானால் !

சமையலறை தீப்பற்றாது
அமையுமிடம் அன்பகமனால்
வாழுமிடம் புதைகுழியாகாது
ஒத்துப்போகும் மனமானால் !

கருத்துக்கள் மாறுபடாது
மருமகளும் மகளானால் !
சச்சரவுகள் எழுந்திடாது
மாமியாரும் தாயானால் !

அன்னையென நினைத்தே
அத்தையின் கரம்பிடித்தால்
புகுந்தவீடும் பிறந்தவீடாகும் !

வருபவளை வரவேற்று
தன்மகளாய் நடத்திட்டால்
வாழும்வரை வசந்தமே !


பழனி குமார்
09 .04 .2017

எழுதியவர் : பழனி குமார் (9-Apr-17, 7:54 am)
பார்வை : 818

மேலே