தெளியவைக்கும் மயக்கம்

ஆயிரம் ஆடவர் என்னை தாண்டி சென்றனர்,
ஒருவரையும் திரும்பி பார்க்க மனம் முற்படவில்லை...

இதயத்தை ஒருமுறை நீ தீண்டி சென்றதால்,
இன்றுவரை அந்த மயக்கம் தெளிந்தபாடில்லை...

என்றும் நிரந்தரமாய் என்னுள் உன்னை பூட்டி வைத்ததினால்,
யாராலும் எவராலும் உள்ளே நுழைந்துவிட முடியவில்லை...

என்னுள் உன்னை காத்தேனே!!!
உன்னால் என்னை காத்தேனே!!!

-என்றும் அன்புடன் ஷாகி

எழுதியவர் : ஷாகிரா பானு (13-Apr-17, 7:32 pm)
பார்வை : 228

மேலே