முட்டாள்

நினைப்பது கிடைப்பதில்லை ;
கிடைப்பது பிடிப்பதில்லை;
சிலர்,
நினைவுகளை மறந்து ,
கிடைத்ததை பிடித்து கொண்டு ,
பொய்யான புன்னகையில்
வாழ்வை கழிக்கின்றனர்;
அவர்கள் வாழ தெரிந்தவர்களாம்............
சிலர்,
நினைவுகளை நிறுத்தாமல்,
நீங்காத துயரத்தோடு,
காயமான இதயத்தோடு,
காலத்தை கழிக்கின்றனர்;
அவர்கள் முட்டாள்களாம்.................
கிடைக்காத காதலை
மறவாமல் மனதில்
வைத்து வாழ்பவர்கள்
முட்டாள்கள் என்றால்,
நான் முட்டாளாகவே விரும்புகிறேன்..............

எழுதியவர் : குழலி (28-Apr-17, 8:15 pm)
Tanglish : muttal
பார்வை : 334

மேலே