புராதன சின்னம்

காலமெல்லாம்
கடுந்தவம் புரிவது போல்
கால் கடுக்க நிற்கும் நீ
காவலனா இல்லை காணலனா?

ஊருக்கு வெளியில் தான்
உன் வாசம்—இருந்தும்
உன்னிடம் வரும் மாந்தருக்கு
உதவாமல் இருப்பதில்லை

கரம் நீட்டி உதவும்
கருணையுள்ள மாந்தர் போல்
கல்லுக்குள்ளும் ஈரமுண்டு
தலை கொடுத்துத் தாங்குவதால்

பலனேதும் பாராமல்
பலரது பாரம் சுமந்துதவும்
புராதன சின்னம் போல
பழமையான சுமைதாங்கி

எழுதியவர் : கோ. கணபதி. (1-May-17, 3:39 pm)
சேர்த்தது : கோ.கணபதி
பார்வை : 138

மேலே