கனவு இப்படித்தான் இருக்கும்போல

ஒரே ஒரு பார்வை " இமைகள்" திறந்து
பார்த்துவிட்டு தலை குனிந்து விட்டாய் !
"பட்டாம்பூச்சி" இப்படிதான் சிறகு விரிக்கும் போல

ஒற்றை வார்த்தை "இதழ்கள் " விரித்து
பேசினாய் !
"பூ" இதழ்கள் விரித்து இப்படித்தான்
மலரும் போல !

உன் மென்விரல் கொண்டு ஒரு தீண்டல்
குளிர் தென்றல் இப்படித்தான் தீண்டும் போல !

அருகில் வந்து தோள் சாய்ந்தாய்
"நிலவு "இப்படித்தான் கார்மேகத்தை உரசும் போல


சட்டென்று உறக்கம் விழித்து சுற்றும் முற்றும் பார்த்தால்
விடியவும் இல்லை ,இனிமேல் உறக்கமும் இல்லை
"கனவு " இப்படித்தான் இருக்கும்போல

எழுதியவர் : வீர . முத்துப்பாண்டி (3-May-17, 4:02 pm)
பார்வை : 69

மேலே