தேவதையே நீ யார்

வண்ணச் சிறகு பெற்று
வானவில் ஒன்று
என் வாசல் கடந்ததோ ?

முள் உதிர்த்து
ஒரு சிவந்த ரோஜா
மறு உருக் கொண்டு
என் வீதி நடந்ததோ ?

மல்லிகைப் பந்தல் ஒன்று
மாலைத் தேரென
பவனி வந்ததோ ?

சிந்தனை துறவு பூண்டு நிற்கும்
இந்த அந்தி மாலையில்
காதல் கவிதை தர வந்த
தேவதையே நீ யார் ?

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (3-May-17, 6:13 pm)
பார்வை : 77

மேலே