அம்மாஅம்மா

தவழும் போது
பார்த்து சிரித்து
அமரும்போது
அடிபடாமல்
வாரி அணைத்து
எட்டடி எடுத்து வைத்து
நடக்கும் போது
கை தட்டி உற்சாகம் கொடுத்து..

வாரி அணைத்து முத்தமிட்டு
பள்ளிச்சீருடையில்
அவளை பார்த்து
திரிஷ்டி சுற்றிவைத்து..

பால்சோறும்..பருப்புசோறும்
பக்குவமாய் ஊட்டி விட்டு
பூங்கா அழைத்துச் சென்று
விளையாட வைக்கும்
இந்த அம்மம்மாவை பார்க்கும்போது
எம் பிள்ளைகளுக்கு இந்த பாக்கியம்
கிட்டவில்லையே என்று ஏங்கவைக்கிறது...
அம்மா....அம்மா...

எழுதியவர் : வே.புனிதா வேளாங்கண்ணி (8-May-17, 4:03 pm)
பார்வை : 133

மேலே