நோபல்

நோபல்
............................

நமது-
தலைவர் சொன்னதை
கேட்டுக்கொண்டிருந்தாய் தானே!
இன்னும்
கொஞ்ச நேரத்தில்
எல்லை வந்துவிடும்...

மீண்டும் சொல்கிறேன்-
தயாராக இரு!
இன்னும் கொஞ்ச நேரத்தில்
எல்லை வந்துவிடும்...

எல்லை வந்ததும்
என்ன செய்யப்போகிறாய்?
மீண்டும் சொல்கிறேன்
எல்லை வந்ததும்
உடனே வீசியெறி!

ஆப்கான்வாசிகள் என்றோ-ஏதும்
அறியாத விவசாயிகள் என்றோ
பெண்கள்-
குழந்தைகள் என்றோ
பரிதாபம் காட்டிவிடாதே!!!

நமது தேசத்தின்
குண்டுகளின் தாய்க்குண்டை-
உடனே வீசியெறி!!!!

மீண்டும் சொல்கிறேன்-
பரிதாபம் காட்டிவிடாதே!!!
அவர்கள் அடிப்படைவாதிகள்-
அத்தோடு பயங்கரவாதிகள்
அதுமட்டுமல்ல-
நாளை உனக்குமொரு
''நோபல்" கிடைக்கலாம்


**சவாளையூர் முஜாஹித்

எழுதியவர் : சவாளையூர் முஜாஹித் அஹமத் (12-May-17, 9:47 am)
சேர்த்தது : savalaiur mujahith 930
பார்வை : 66

மேலே