தாளில் வரையப்பட்ட ஒவியம்

தாளில் வரையப்பட்ட ஒவியம்
*

தங்கச் சிலையாயவள் தாராளமாய்
தாமரையிதயத்திலமர்ந்தாள்
தாளில் வரையப்பட்ட ஓவியமாய்.
தாகம் தீர்க்கிறாள் காவியமாய்.

*

காணுதலெனுமியக்கத்தாலன்பை நீவியும்
ஆசையைத் தூவியும் காதற்
பெருவலியைத் தாவியுமோடச் செய்யலாமிது
காதல் தத்துவம்.

*

வேதா. இலங்காதிலகம். டென்மார்க் . 23-4-2017

*

எழுதியவர் : பா வானதி வேதா. இலங்காத (15-May-17, 4:12 pm)
பார்வை : 114

மேலே