விடியலே

என்
இருதயமே
தமிழ் மண்ணோடு விதைத்துக்கொள். . .
சுவாசமே
தீண்டாமையை எரித்துவிடு ...
கரங்களே
சமத்துவத்தை அரவணைத்துக்கொள். . .
மீசையே
பாரதியின் எண்ணங்களை -என்னுள்
முறுக்கி விடு. . . .
கால்களே
நீ மட்டும் களைப்பாறாதே -கனநேரம்
காத்திரு வீறு நடை போட
விடியலை நோக்கி!!!

ம.பா

எழுதியவர் : மருதுபாண்டியன். க (26-May-17, 10:09 pm)
சேர்த்தது : மருதுபாண்டியன்க
Tanglish : vidiyale
பார்வை : 694

மேலே