எல்லாம் நேசிக்கிறேன் அதில் உன்னை காண்பதால்

கவிதையின் காதலி ஆகிறேன்
என்னவன் கவிதையாவதால்
எழுத்தில் புலவி ஆகிறேன்
என்னவன் தமிழ் ஆவதால்
கற்சிலையிலும் கண் இமைக்கிறேன்
என்னவன் உளி ஆவதால்
கடலிலும் கொஞ்சம் கலக்கிறேன்
என்னவன் மீனவன் என்பதால்
ஏனோ கானல் நீராகிறேன்
என்னவன் தொலை தூரமாய் வருவதால்
காட்சியில் பிழை ஆகிறேன்
சரி செய்ய அவன் அருகில் வருவதால்
தோற்றுவிட துடிக்கிறேன்
தேற்றிவிட நீ இருப்பதால்
மேகம் , நிலம் , நீர் , காற்று , தீ , என எல்லாம் நேசிக்கிறேன்
அதில் உன்னை காண்பதால் .........