கேட்க துணிச்சல் இல்லை நேராக

நாறும் உன் குழல்பூக்கள்
இணைக்கும் நாராக...
இனிக்கும் அதரங்களில்
ஒட்டிய நீராக...
தாமரையால் உன்னை
தாங்கும் சேறாக...
சிலை உனை
பவனி செய்வித்திடும் தேராக..
இக்கோரிக்கைகளை கேட்க என்னிடம்
துணிச்சல் இல்லை நேராக...

எழுதியவர் : தமிழ் தாசன் (1-Jun-17, 10:30 am)
சேர்த்தது : பாலா
பார்வை : 1457

மேலே