பெண் பார்த்தப் படலம்
பெண் பார்த்தப் படலம்
நேற்றுப் பார்த்த
பெண் மிகவும் அழகாம்..
சொல்லிக் கொண்டார்கள்
எனது வீட்டினர்...
அதிக ஒப்பனையில்
அப்படியொன்றும் தெரியவில்லை...
ஒப்பனையில்லாமல்..
ஒரு தடவை பார்க்க..
ஓர் ஆசை எழுந்தது...
அதிகாலையில்..
அவள் வீட்டு
அழைப்புமணியை
அழுத்தினேன்...
அத்தைதான் திறந்திட்டாள்..
ஆச்சிரியத்தோடு...
அடுத்தநொடியே..
அவள் அத்தானை
அழைத்திட்டாள்
அதிகாரத்தோடு...
அவரும் வந்திட்டார்
அடக்கத்தோடு...
அறிகுறிகள்
அற்புதமாய் தெரிந்தது..
அரசாட்சி அல்ல...
அத்தை மீனாட்சி..
ஆட்சிதான் என்று...
அவர்களிடம்
அனைத்தையும்
அடிமொழிந்தேன்...
அத்தை
அவள் பெயரைச் சொல்லி
அழைத்ததும்...
அரைத்தூக்கத்தில்..
அலங்கோலமாய்..
அடியெடுத்து வந்தவள்...
அரைநொடியில்..
அறைக்குள்..
அடைக்கலம் புகுந்திட்டாள்...
கொஞ்சம் நேரம் கழித்து..
கொஞ்சிப்பேசி மகிழ்ந்து..
விடைப்பெற்றேன்..
வழியனுப்ப..
வாசல் வரை வந்தாள்...
அவள் கண்கள் சிவந்திருந்தன..
அவளை சீண்டிப்பார்க்க..
ஆசைப்பட்டேன்...
“நேற்று தூக்கமில்லையோ” என்றேன்..
வெட்கத்தால்..
தலைகுனிந்தவள்..
நிமிர்ந்தாள்..
“எதற்கு அதிகாலை வரவு...?”
என்றது அவளின் பார்வை...
“மன்னிப்புக் கேட்க...” என்றேன்
“ஏன்..” என்றாள்.
“உன் மார்புக்கிடையில்..
என் நகக்கீறல் பதித்ததற்கு..”
என்று சொன்னேன்...
வெகுளியாய் சிரித்து..
வேடிக்கையாய் – அவள்
மார்பினை பார்த்தவள்..
மயங்கி..
என் மார்பினில்..
விழுந்திட்டாள்...
ஏனென்பதற்குள்..
எதைச்சையாக..
எட்டிப்பார்த்தேன்..
என்னவளின் மார்பை...
எதிர்ப்பார்க்கவில்லை..
அவள் மார்புக்களுக்கிடையில்
நகக்கீறல்...?
கலவரத்தோடு..
என் பின்கழுத்தை தடவினால்..
எமகாதகி..
காமம் மிகுந்த காதலால்..
கடித்த காயம்...
அப்படியென்றால்..? நேற்று..?
கனவுகள் கூட
காயம் ஏற்படுத்துமோ..?
********************
சிகுவரா
ஆகஸ்து 2005