ஆண்மகன்
ஆண்...
இறுக்கமான தோற்றம்
கொண்டாலும்
இரு சொட்டுக் கண்ணீர் துளிகளைக் கூட
தாங்கிக் கொள்ள முடியாத
இறக்கமானவன்....
பத்து மாதம் சுமப்பவளுக்கு நித்திரை இல்லையெனில் நித்தமும் சுமப்பவனுக்கு நிம்மதி ஏது?
அப்பாவான பிறகு தப்பாகத் தெரிகிறான்
தன் பிள்ளைகளின் ஆசையை நிறைவேற்றாவிடில்....
வாழ்க்கையென்னும் தண்டவாளத்தில் உறவுகள் யாவும் இரயில் பெட்டிகளாயிருக்க...
அதை இழுத்துச் செல்லும் இயந்திரமாகத் தன்னை மாற்றிக் கொண்டவன் அவன்...
ஆளப் பிறந்தவனுக்கு அழக் கூட அனுமதியில்லை... ஆணாக பிறந்து விட்டானே!
சுமைதாங்கியான அவனது தேடல் வெறும் ஆறுதலும் அன்பும் மட்டுமே...