முத்தம் தர காத்திரு மணாளனே

முத்தத்திற்கென்ன பஞ்சம்
அள்ளி அள்ளி தந்திடலாம்
நீ ஒரு பிள்ளையாய் என்
மடியில் தவழ்ந்திடும் போது

இப்போது நீ முத்தம் தா
என்று கேட்டால் நான்
சொல்வேன் நீ முதலில்
என்னை உன்னவளாக்கிவிடு
முறையாய் எனக்கு உன்
மனைவி என்ற ஸ்தானத்தை
கொடுத்துவிடு மூன்று முடிச்சு
என் கழுத்தில் என் உற்றார்
உறவினர் முன் கட்டிவிட்டு
வேதியர்கள் வேதம் ஓத
மத்தளம் கொட்ட நாதஸ்வரம்
இன்னிசை தந்திட அந்த
மங்கள சூத்திரத்தை -அப்புறம்
வரும் முதல் இரவில் நான்
உனக்கு தருவேன் இங்கிதமாய்
ஆயிரம் முத்தங்கள் மலைபோல
உன் மோக தீர்ந்திடும் வரை
என் கண்ணாளனே

அதுவரை காத்திரு பொறுமையுடன்
இது உன் காதலி நான் உனக்கு இடும்
அன்பு ஆணை முந்தாணை

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (23-Jun-17, 2:49 pm)
பார்வை : 103

மேலே