ஆசை
"என்னவனே"
சின்ன சின்னதாய் என் மனதில் உள்ள ஆசைகளை சொல்லவா.....
இது கவிதை அல்ல கற்பனையில் நான் கோர்த்த மாலை.....
கொட்டும் மழையில் ஓரே குடையில் உன் தோளுரசி நடக்க ஆசை.....
உன் கை பற்றி உன் பாதம் பின் தொடர ஆசை.....
உன் கரம் பட்ட மல்லிகை சூடிக்கொள்ள ஆசை.....
உன் விரல் நகம் வெட்டி விட ஆசை.....
உன் விரலுக்கு சொடக்கு எடுக்க ஆசை.....
உன் கைகளுக்கு மருதாணி இட்டு விட ஆசை.....
உன் சட்டையை அணிந்து பார்க்க ஆசை.....
உன் கோபத்தை கொஞ்சம் சீண்டி பார்க்க ஆசை.....
என் வெட்கத்தை நீ ரசிக்க ஆசை.....
குட்டி குட்டி கதைகள் பேசி உன் மீது குழந்தையென உறங்கிட ஆசை.....
நமக்கு எத்தனை குழந்தைகள் பிறந்தாலும் உனது முதல் குழந்தை நானாக இருக்க ஆசை.....
உனக்கே உனக்காக கவிதைகள் நான் எழுதிட அதை நீ படிக்க ஆசை.....
என் வாழ்நாள் முழுவதும் உன்னோடு வாழ ஆசை.....
நான் சாகும் போது உன் மடிமேல் இறக்க ஆசை.....