வாழ்த்துக்கள் பல

கானகக் கவுதாரிகள் குடும்பமாக
தன் அழகிய சிறு குஞ்சுகளுடன்
ஓடியோடி நடக்கும் அந்த நடையழகு.

சிறார்கள் தன் அலகால் தரைகொத்தி
இரை சிக்கியதுகூட புரியாமல்
தலை உதறும் நிலை தனியழகு.

தாயின் மொழியுணர்ந்து ஒரு கீச்சுக்கு
அடிபணிந்து சலசலக்க எச்சரிக்கையாய்
உயிர்ப்புடன் பறந்து ஒளிந்துகொள்வது ஓரழகு.

உலகமே துடிப்புடன் இயங்கும் பொழுது
உன்போல் இனிமையாய் துயில்ந்து
நிலைமறந்து கிடப்பதும் அழகுதான்.

எல்லா அமைதியும் கிடைக்கப்பெற்ற
முழு மகிழ்வும் அனுபவிக்க வரம்பெற்ற
மதிமறந்து மனம்திறந்த இன்பவாழ்வு வாழ்கவே.

எழுதியவர் : thee (19-Jul-11, 11:31 am)
பார்வை : 591

மேலே