மனநோயாளி

வீங்கிய வயிற்றோடு
வீதியில் வீற்றிருக்கிறாள்..!

வீச்சுச்சகதி பூசி சடங்கு நடக்கிறது..!
வீணர்கள் எவரோ புசித்துப்புணர்ந்து
வீசியவளவள் வயிறு நிரம்பியிருக்கிறது..!

கல்லாகிப்போன கடவுளுக்கு
மனு கொடுக்கவேண்டுமென்றுதான்
கருவை சுமந்து கொண்டு
காகிதங்களை
சேகரித்துக்கொண்டிருக்கிறாளோ??

வீரியமற்ற விசனக்காரி..!
(பைத்தியக்காரி)

எழுதியவர் : நிவேதா சுப்பிரமணியம் (8-Jul-17, 1:27 pm)
பார்வை : 214

மேலே