என்றும் நிம்மதியில்லை

மனம் விட்டு பேசும் போது அதை மதிக்கும் நண்பர்களில்லை...
அன்பைக் காட்டும் போது அதைச் சந்தேகிக்காத இதயங்களில்லை...

கோபம் கொண்டால் அதைப் புரிந்துக் கொள்ளும் நன்மதி இல்லை...
பணத்திற்கு இருக்கும் மதிப்பு குணத்திற்கு இல்லை...

கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை இல்லை...
சகோதரர்களுக்கிடையே சமத்துவம் இல்லை...

இதயங்கள் கொண்ட காதலில் உறுதி இல்லை...
மனிதர்கள் மனதில் உத்தம எண்ணங்களில்லை...

புத்தியில் கூர்மை இல்லை...
சக்தியில் நம்பிக்கை இல்லை...

கண்மூடும் வேளையிலும் காசாசை போகவில்லை...
தானென்ற அகந்தை அழியவில்லை...
போட்டி, பொறாமை ஓழியவில்லை...

ஆக வாழ்வில் என்றும் நிம்மதியில்லை...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (9-Jul-17, 8:14 pm)
பார்வை : 1706

மேலே