இரவில்

இரவில்....
வான கருங்கடலில்
நீந்திக்கொண்டிருக்கும்
மேகமீன்கள் ...-அதில்
முத்தென முளைத்திருக்கும்
நட்சத்திரத்தை ...
தென்றலோடு கோர்த்து
ஆரமாக்கினேன்
அந்நிலவிற்கு ....
அணிவிக்க...

முழுதாய்
முகத்தை கண்டதும்
முழுநிலா கரைய தொடங்கியது...
என்னுள் ,
தொலைய தொடங்கியது ...

மதியின் மனம் யார் அறிவது?
அதன் தனிமை யார் உணர்வது ?

எழுதியவர் : மதி (10-Jul-17, 8:02 pm)
Tanglish : iravil
பார்வை : 2380

மேலே