என் பார்வையில் அவன்

கண்களோடு மட்டும் நிறுத்திக்கொண்டான் ...............முதல் பார்வையில்
கன்னியமானவன் என்றேன் ............
வசமாய் இடம் இருந்தும் வாசல் வரையும் நகர்ந்துவிட்டான் .................
பழக தெரிந்தவன் என்றேன் ..............
உயரமாய் இருந்தும் ஒழுக்கமான பார்வை ................
ஏனோ நிம்மதி அடைந்தேன் ..............
பகிர்ந்துகொள்ளும் பேச்சில் மருந்துக்கும் பொய் இல்லை
உண்மையின் பிறப்பென்றேன் ..................
பேருந்தின் உயிர் அற்ற ஒழுக்கம் தொலைத்தவர்கள் கடந்திடுகையில்
ஒருநிமிடம் யோசிப்பேன்..........................
உன்னைப்போல் ஏன் ஒருவனும் இல்லை என்று ,,,,,,,,,,