காமமும் வாழ்க்கையும்
காமம் என்பது பசியொப்ப
ஒரு போகம்தான்,அது
காதலில் பின்னர் வாழ்க்கையில்
ஓர் அங்கம் என்றிருப்பினும்
காமமே வாழ்க்கை என்று
பித்தம்கொண்டு அலைவதால் தான்
மோகம் தலைக்கேறி
பெண்ணை வெறும் கேளிக்கை பொருளாஅவள் கற்பை ய்
எண்ணி அவள் கற்பை சூறையாடிதல் போன்ற
அசுரர் குணங்கள் மனிதனிடையில்
தலைவிரித்து ஆடுகிறது இன்று
மேலை நாடுகள் சிலவற்றில்
காமத்தீ மனிதனை ஏதேதோ செய்ய தூண்ட
அவன் இல்லக்கிழத்தியை விட்டு விட்டு
காமக்கிழத்தியையும் விட்டு விட்டு
"காம ரோபோ"களை தேடி நாடி அலைகின்றாராம்!
மனைவிதரும் இன்பம் போதாதென்று
காமத்திற்காக ரோபோக்களை வாங்கி
அவைகளுடன் குடித்தனம் நடத்துவதேன்?
காதல் என்ற சொல்லிற்கு இவர்களுக்கு
நல்லர்த்தங்கள் புரியாததாலோ ?...........
இல்லை காமமே வாழ்க்கை என்று இவர்கள்
எண்ணுவதாலோ ?..................
இல்லை இது கலியில் மனிதர் போக்கா!
தெரியவில்லையே !