அன்பின் துளியில் பிரபஞ்சம்
![](https://eluthu.com/images/loading.gif)
காற்றில் மறையும்
ஒலியின் கரைசல்
விமர்சனம்
அதைப்பற்றி
ஏன் கவலை ?
எழுத்தில் வரைந்த
சாடல்கள் எல்லாம்
கோடுகள் புள்ளிகள்
கோபம் எதற்கு?
பேச்சை எழுத்தை
கடந்து போனபின்
அன்பின் துளியொன்று
நெஞ்சில் எஞ்சுமெனில்
அதுவே உண்மை !
அதற்காக மட்டும்
உருகலாம் ;உறையலாம்
பிரபஞ்சம் அதற்குள்
ஒளிந்திருக்கிறது
கண்டுகொள்ளலாம்
வா அன்பே !