என் மீதி நாட்களுக்கான வரம் தாராயாே
எண்ணெய் தீர்ந்த விளக்காய்
உயிர்த்தீபம் எந்நேரம் அணையுமோ...
தீர்த்தம் புகட்டிவிடு...
பாலையான என் நிலத்தில்
தூறலாகப் பெய்து
உயிர்த் துளிர்க்கவிடு...
காத்திருக்கும் என்னில்
கானலாகிப் போகாமல்
காதல் பெருக்கிவிடு...
நிலவே உதித்துவிடு..
அந்தகாரம் போர்த்திய வானில்
அகல்விளக்கேற்றிவிடு...
மலரே மலர்ந்துவிடு...
வாசம் துறந்த எனக்கு
நறுமணங்கள் சுவாசிக்கவிடு...
பனியே துளிர்த்துவிடு...
தகிக்கும் எனதுடலில்
தண்மையாய் படர்ந்துவிடு...
வானவில்லே வாராயோ...
எந்தன் பாரெங்கும்
பல வண்ணம் பூசிவிட...
மாருதமே வாராயோ...
என் சோலை மலர்களுக்கு
சோபை கூட்டிவிட...
வசந்தமே வாராயோ...
என் மீதி நாட்களுக்கு
வாழும் வரமளித்துவிட!..