உருகும் இதயத்தில் உயிரோவியமாய் நீ

உருகும் இதயத்தில்
உயிரோவியமாய் நீ...
உணர்வின் நரம்புகளில்
உயிரோட்டமாய் நீ...

மருகும் மனதின்
மறுபதிப்பாய் நீ...
மலரும் நிஜத்தில்
மத்தாப்பாய் நீ..

உலவும் தனிமையில்
உறுதுணையாய் நீ...
உளறும் கனவுகளில்
உடனிருக்கிறாய் நீ...

மடியும் நாட்களில்
மணிச்சட்டமாய் நீ...
மலரும் விடியலுக்கு
மறுபெயராய் நீ..

உரைக்கும் வார்த்தையின்
உட்பொருளாய் நீ...
உதட்டின் ரேகைகளில்
உறைபனியாய் நீ...

மறை உள்ளத்தின்
மரபியலாய் நீ...
மருண்ட உயிருக்கு
மருந்தாய் நீ...

உயிரின் அணுக்களை
உரசுகிறாய் நீ...
உணர்வின் கருவை
உயிர்ப்பிக்கிறாய் நீ...

மனதை மலராய்
மலர்விக்கிறாய் நீ...
மரணப் படுக்கையில்
மறுபிறவியாய் நீ!..

எழுதியவர் : கவிப்_பிரியை_shah (22-Jul-17, 1:47 pm)
பார்வை : 40

மேலே