அவள் இறுதியாக கேட்ட கேள்விக்கு என்னிடம் பதில் இருக்கு ஆனால் அவள் இல்லை

அழகாய் மிக அழகாய் ...................
கல்லூரி , படிப்பு , வேலை , என்று இயல்பான வாழ்கை அதில் இயல்பில்லாத சோகம். சிலநாட்களாக இது மன்னிக்கமுடியா குற்றம் ஆனால் அந்த குற்றத்தினை செய்ய தூண்டியது யார் ? எது ? எதனால் ?
இன்றுவரை விடை தெரியவில்லை ஆம் விடை தெரியா கேள்வி ஆகிவிட்டேன் ..............................

அவசரம்தான் ஆனாலும் அவசரம் இல்லாத வேகம் தான், அதில் பயணம் தனியாய் இருசக்கர வாகனத்தில் இடை நிற்காத பயணம். பயணம் அதில் ஒரு சிறு இறுமாப்புதான் அது வாகனத்தினால் வந்ததா, இல்லை படித்து முடித்த திமிரில் வந்ததா, இல்லை மிக நன்றாய் இல்லாமல் ஆனாலும் சிறிது நன்றாய் கிடைத்த வேலையினால் வந்ததா எது என்று தெரியவில்லை ஆனால் அந்த காலங்களில் அவ்வளவு மகிழ்வுகள். சரி பயணத்துக்கு வருவோம் ............
இறுமாப்பு கொண்டிருந்த நேரம் தனியான பயணம் சம்பந்தம் இல்லாத சிணுங்கல் என் இருதயத்தில்
மன்னிக்கவும் இருதயத்துக்கு வெளியில் இருந்த சட்டை பையில் சம்பந்தம் இல்லாத அழைப்புதான் என்னோ சந்தேகத்தின் பேரில் யாரென்ற தோணியில் ,,,
நான் : hello ,,,
எதிர்முனை : எங்க இருக்க சீக்கிரம் வா hospital போய்ட்டு இருக்கேன் ......
நான் : ( பெண் குரல் என்பதாலோ என்னவோ மிக மரியாதையுடன் ) யாருங்க பேசுறீங்க number மாத்தி பண்ணிடீங்க உங்களுக்கு யாரு வேணும் ......
எதிர் முனை : sorry sorry தெரியாம cal பண்ணிட்டேன் ........... worng number
நான் : ம்ம் ok ................ இனம் புரியாத குழப்பங்களுடன் மனம் இல்லாமல் கைபேசி துண்டிப்பு ,,,,
அது ஏன் என்று தெரியவில்லை பதற்றமாய் பேசியதாலா இல்லை பெண் என்பதாலா சரியாய் தெரியவில்லை ஏதோ ஒரு இனம் புரியா நிலைதான் இருந்தும் என்ன செய்ய பணிநிமிர்தம், சிறிதான நேரம் அதனால் அந்த பதற்றம் ஒருவராய் மறந்து விட்டேன் ..... கழுத்து வரை வந்த வேலை பணியை தலைக்கு மேலே சென்றுவிடாமல் சிறப்பாய் முடித்து ஓய்வு எடுத்துக்கொண்டு இருந்த நேரம் ......
மனம் ஏதோ சொல்லாமல் சொல்லியது கைகள் செய்யாமல் செய்த்தது வேண்டாம் என்று ஒரு நிமிடம் பதற்றமான நிமிடத்தில் பேசியதாலோ என்னவோ--- சரி முயற்சித்து பாக்கலாம்.......வேண்டாம்,,,இல்லை ஒருமுறை --- இப்படி பலவாராய் யோசித்து இறுதியில் ஒருவராய் பேசித்தான் பார்த்துவிடலாமே பாவம் என்ன ஆயிற்றோ ஏதோ இப்படி புலம்பியபடி அந்த தவறான எண்ணுக்கு தவறாமல் ஒரு அழைப்பு விடுதேன்.
சிறிது நேர அலை ஒலிக்குயெலாம் எதிர் முனை குரல்
நான் : யாருங்க நீங்க என்ன ஆச்சு மத்தியானம் ரொம்ப பதற்றமா இறுதிங்க அப்போ என்னால பேசமுடியல
எதிர் முனை : அப்டிலாம் ஒன்னும் இல்லைங்க என் குரலே அப்டித்தான் ஒன்னும் இல்ல என் அண்ணாவுக்கு cal பனேன் உங்களுக்கு தெரியாம வந்துருச்சு சரியா number ha save பண்ணல soooooo ......
நான் : ம்ம் ok பரவாலங்க ......... (சிறிய இடைவெளிக்கு பிறகு "பேச்சை தொடர ஆசை கொண்டு " )
நான் இங்க திருச்சிராப்பள்ளி ல இருந்துதான் பேசுறேன் வேலைல இருந்தனால அப்போ சரியானபடி பதில் சொல்லமுடியல.............
எதிர் முனை : திருச்சிராப்பள்ளி ல இருக்குறவங்க ரொம்ப பாசமானவர்களோ wrong cal கு again cal பண்ணி நலம் விசாரிக்குற அளவுக்கு ..............
நான் : (சிறிய இடைவெளி வெட்கத்திற்கா இல்லை எதனாலோ என்று தெரியவில்லை ) ஆமாம் ஆமாம் திருச்சிராப்பள்ளி மக்கள் அப்படித்தான் சிறு சிரிப்போடு
எதிர் முனை : ம்ம்ம்ம் நன்றாகத்தான் பேசுறீங்க ............
இவ்வாறான பேச்சுக்களில் தொடர்ந்து பிறகு எப்படியெல்லாம் போயிருக்கும் என்பது நான் சொல்லி தெரிய வேண்டியது இல்லை வாசகர்களே நன்றாய் அறிவர் ...........

ஆனால் அந்த நிமிடங்கள் என்னை நெருங்காமல் இருந்திருக்கலாம் என்று இப்போது நினைக்கிறன் பேசி பழகும்வரை எல்லாம் சிறப்பாய் போய்க்கொண்டு இருந்த தருணம்தான் வயதிற்கு ஏற்ற செயல் தான்

அலைபேசி சினுங்கையில் அவள் நினைப்புமட்டும்தான்
அலைபேசி சிணுங்காத போதும் அவள் நினைப்புமட்டும்தான்
என் தனிமையும் தனிமை படவில்லை ...........
அவள் நினைவுகளால்

இவ்வாறான கவிபுனையும் கிறுக்கன் இல்லை இல்லை காதல் கிறுக்கன் ஆனேன் ........ அவள் பேச்சுக்காக காத்துக்கிடந்தேன் செல்லும் நிமிடங்கள் மறந்தேன் அவள் பேசும் நிமிடம் மலர்தேன் சுருக்கமாய் சொல்லப்போனால் எப்படியென்று தெரியவில்லை ஆனாலும் ஏதோ ........... நல்ல மாற்றம்தான் என்னிடம் ஒருபுறம் சிறுபிள்ளை தெரியாமல் செய்கிறது என்று நினைத்தாலும் பெண்டீர் பாசம் நம்மை நிலைகுலையத்தான் செய்கிறது

ஆனால் ஏதோ ஒரு நாள் என்றும் இல்லாதது போல் புதிதாய் இரவு நெடு நேரத்திற்கு பிறகு அழைப்பு புதிதாய் ஏதேதோ பேச்சு எப்போதும் போல் இல்லாமல் புதிதாய் ஆனால் அழுத்தமாய்

அவள் : நா உனையே............ இல்ல உன்கிட்ட ........ ம்ம்ம் ........... சுத்தி வளச்சு பேசல உன்ன எனக்கு ரொம்ப புடுச்சு இருக்கு உன்ன பாக்கனும்போல இருக்கு நீ எப்டியிருந்தாலும் பரவால்ல நீ உன்னோட love பண்றேன் நீயும் என்னை.....................................

நான் : சே அப்டிலாம் இல்ல என்ன நீ இப்படிலாம் பேசுற உன்ன நா அப்டி நினைக்கல .......
(மனதிற்குள் இப்போதே புறப்பட்டுவிட்டேன் நாளை உன் வீடு வாசலில் நிற்பேன் நான் உன்னிடம் காதல் சொல்லும் தருணம் நீ என் கண்ணில் தெரிய வேண்டும் உன் வெட்கம் அவ்வளவையும் நான் ரசிக்கவேணும் இவ்வாறான மனக்கோட்டை )

அவள் : (அழுகையுடன்) பொய் சொல்லாத நா வந்து வந்து நீ எனைய love பண்ணலயா ????
ப்ளஸ் உண்மைய சொல்லு நா ................

நான் : இல்ல இல்ல ................. bye பேசிக்கொண்டு இருக்கும்போதே அழைப்பை துண்டித்துவிட்டேன்
நாளை நடக்கப்போகும் நிகழ்வுகளுடன் பேருந்து பயணம் ....................
மறுநாள் பேசிக்கொண்டு இருக்கும்போது நல்லவேளையாக அவளின் விலாசத்தை வாங்கிவிட்டேன் என்ற நினைப்போடு அவளின் வீடு அடைந்தேன் அந்த வீடு விழாக்கோலம் கொண்டது போல அவ்வளவு கூட்டம் இந்தநிலையில் அவளை எப்படி சந்திப்பது என்ற நோக்கதோடு அவளது தொலைபேசியை தொடர்புகொண்டேன் வேறு குரல் ஒலித்ததில் அழைப்பை துண்டித்துவிட்டேன் ...
மறுபடியும் அதே தொலைபேசியில் இருந்து அவனுக்கு அழைப்பு ஆனால் வேறு குரல் ........

எதிர் முனை : அண்ணா நீங்கள்தான் ராம் ha ...................

நான் : ஆம் ஆனால் அவள் இல்லையா இல்லை கோவமா?

எதிர் முனை : உங்களிடம் ஒன்று கொடுக்கச்சொன்னால் நீங்க எப்ப வந்து வாங்கிக்குவிங்க அண்ணா ....
எங்க இருக்கீங்க உங்க address ha குடுங்க நானே வரேன்

நான் : அவ்ளோ சிரமம் வேணாம் நா அவளோட வீட்டுக்கு வெளியேதான் இருக்கேன் அம்மணியை வரச்சொல்லுங்க தங்கச்சி pls

எதிர் முனை : hoooo இருங்க அண்ணா ...........

நா யாருமேலயும் பாசம் வைக்கக்கூடாதுனு நினைக்குறேன் அம்மா அப்பா அப்டினு நா பாசம் வச்சவங்க எல்லாரும் மேல போய்ட்டாங்க எனக்கும் இன்னைக்குத்தான் கடைசி நாள்னு தெரிஞ்சுருச்சு
என்ன------ நா புதுசா ஏதேதோ நோய் பேர சொல்லுறாங்க அதெல்லாம் விடு எனக்கு இன்னைக்கு தான் கடைசி நாள்னு தெரிஜூருச்சு நா ஏன் இந்த நோய் இருக்குனு சொல்லல தெரியுமா அப்டி நா சொல்லியிருந்தா நா love சொன்னவுடனே ok சொல்லியிருப்ப and என்மேலும் உனக்கும் பரிதாபம் வந்துருக்கும்

நா ரொம்ப சந்தோசமா இருந்த நிமிஷம் உண்ட பேசின நிமிஷம் மட்டும்தான் ஆனா உனக்கு அதுபோல நா பேசினப்போ இல்ல போல விடு பரவால்ல எது எப்படி இருந்தா என்ன i love ராம் இந்த வார்த்தைல எல்லாமே இருக்கு இதுல என்னோட சந்தோசம் இருக்கு என் சிரிப்பு இருக்கு என்னோட கடைசி நிமிடம் இருக்கு என்னோட உண்மை இருக்கு நா என் இப்போ last ha சொன்னேனா கடைசியா போகும்போதாவது எனக்காக யாராவது இருக்காங்களானு தெரிஞ்சுக்கத்தான்

கடைசியா ஒன்னு நீ என்ன love பண்ணலன்னு பொய் தானே சொன்ன......................................

அவள் இறுதியாக கேட்ட கேள்விக்கு என்னிடம் பதில் இருக்கு ஆனால் அவள் இல்லை .........

எழுதியவர் : வான்மதி கோபால் (28-Jul-17, 11:07 pm)
சேர்த்தது : வான்மதி கோபால்
பார்வை : 456

மேலே