பாலறியா தோழமை

பூவிதழ் தவழும்
பனித்துளி காண்..!
மலரோ பனியோ
மாசுறா தான்..!
புனிதமா நட்பினில்
பூவது நான்..!
புதினமாய் எழுதிடும்
அனிலமும் தான்.!
இமையின் அசைவிலே
இசை மழையே..!
இச்சைக்கு இங்கே
இடமில்லையே ..!
வசைச் சொல்கூட
வலுவில்லையே..!
திசையாவும் நட்பின்
தீந்தேன் மழையே..!