நட்பின் பாதையில்
ஒவ்வொரு
நிமிடந்தனில்
அன்பின் சாரலை
அள்ளித்தெளித்தது
எங்கள் நட்பின் வானம்...
நாங்கள்
கைகோர்க்கா பயணமென்று
ஏதுமில்லை ..
கைகோர்த்து
யாம் போன
எம் நட்பின் பயணத்துக்கு
எங்கேயும் எல்லை இல்லை....
எங்களை இணைத்த
நட்பின் தொகுப்பிலே
வரி மாறா
கவிதைகள் நாங்கள்...
தோளில் சாய்ந்த
தோழமை மறவோம் ..
எம் விழியென ,
விழிகள் காணும் விடியலென,
தொடரும் நட்பே
எங்கள் நினைவாம்..
எப்போதும்
எங்கேயும்
நாங்கள் இணைவோம் ...
எங்களுக்குள் பிரிவே இல்லை - ஏனெனில்
எங்களுக்கு பிரியமே எல்லை..
எங்களின் பயணம்
முடிவில்லாது தொடரும்
நட்பின் பாதையில் ..