அறியாமல் நட்பு கொண்டோம்

அறியாமல் நட்பு கொண்டோம்
அறிந்து பிரிகிறோம்
சுகம் துக்கம் பிரிவு
அனைத்தும் தெறிந்தோம் நமது வாழ்வில்
காலம் என்னும் சுழற்சியில் சிக்கி தவிக்கிறோம்
எங்கு சென்றாலும் நமது நினைவலைகள்
இம்மரம் கூறும் நமது பேச்சுக்களை
இந்த இருக்கைகள் பேசும் நமது கலாட்டாவை
இந்த அறை கதறும் நமது கதறல்களை
இக்கல்லூரி சுமக்கும் நமது நினைவுகளை
எத்தனை சம்பவங்கள்
எத்தனை நினைவுகள்
நாம் சுமப்போம் சுகமான சுமையாய்
காலம் கடந்தும் மீண்டும் எடுப்போம் நமது புதையும் நினைவுகளை.....

எழுதியவர் : (2-Aug-17, 11:12 pm)
சேர்த்தது : அரும்பிசை
பார்வை : 828

மேலே