மரணத்தை விற்கும் வியாபாரி

#மரணத்தை_விற்கும்_வியாபாரி!

புதிய இந்தியா பிறந்தது என்றாய்!
அரைகிலோ இறைச்சி வைத்திருந்தவனை அடித்தே கொன்றுவிட்டு ஆயிரமாயிரம் கோமாதாக்களை கொலை செய்து தேசம் முழுவதும் விற்றாய்.

புதிய இந்தியா பிறந்தது என்றாய்.
அம்பானிகளும் அதானிகளும் பதுக்கல் நோட்டுக்களை முன்கூட்டியே மாற்றிக்கொள்ள,
அய்யாசாமியும் அந்தோணியும் ஆண்டாண்டு காலம் சேமித்து வைத்ததை செல்லாது என்றாய்.

புதிய இந்தியா பிறந்தது என்றாய்!
பீட்ஷாவும் பர்க்கரும் 5% வரியோடு ஒதுங்கிக் கொள்ள,
கடலை மிட்டாயும் ஊறுகாய் பொட்டலமும் 28% வரியைச் சுமந்து கொண்டன.

புதிய இந்தியா பிறந்தது என்றாய்!
தலித் மக்களை நிர்வாணமாக்கி ஒருவரை ஒருவர் சுமக்க வைத்து நிர்வாணமான நிராயுதபாணி பெண்ணின் மார்பை பிடித்துக் கொண்டே பாரத் மாத்தாக்கீ ஜே என்கிறான்.

புதிய இந்தியா பிறந்தது என்றாய்!
சத்துணவிற்கு ஆதார்கார்டு, ரேசனுக்கு கார்டே இல்லை, மல்லையாவின் கடனை சரி செய்ய எரிவாயு மானியத்தை ரத்து என்றாய்.

புதிய இந்தியா பிறந்தது என்றாய்!
நடந்தே போன கர்ப்பிணிக்கு நடு ரோட்டில் பிரசவம். புதிய இந்தியாவைப் பார்க்காமலேயே சாலையில் செத்துப் போனது சிசு.

மாடுகளுக்கு ஆம்புலன்ஸ் கொடுத்து
மக்களுக்கு மரணத்தை கொடுக்கும் மரணவியாபாரியின் புதிய இந்தியாவில் இனி மனிதர்கள் வாழ முடியாது.

உலகமே காரித் துப்பும் கேடுகெட்ட புதிய இந்தியா எங்களுக்கு வேண்டாம். பழைய இந்தியாவை நீ திருப்பிக் கொடுத்து விட்டு உன் தாய்தேசத்திற்கே போய்விடு. குறைந்தபட்சம் மீதமுள்ள இந்தியாவாவது வாழட்டும்!

எழுதியவர் : யாரோ ஒருவர் (6-Aug-17, 3:15 pm)
பார்வை : 77

மேலே