நட்பு

உலகமறியா முன்னே
கைகோர்த்த உறவு
சிறு உடல்கொண்டு
மலையை இழுத்த காலமுண்டு
கீரல்களும் காயங்களும்
பல வந்துபோனதுண்டு-ஆனால்
ரணங்களானதில்லை...
பதின்ம கோளாறில்
வன்மம் வந்ததுண்டு-பெண்ணுக்காக
ஆனாலும் பிரிந்ததில்லை
நகரும் மேகமாய்
கலைந்து சென்றது
வன்மம் பெண்ணோடு
நட்பின் காவியம்
கர்ணனும் துரியோயதனுமாம்
நம்மை கானாதோர்
வரைந்து சென்றது- காலத்தின்
கோலம் கண்டம் விட்டு
விலகினாலும் விலகா
நட்புடன் நாம்
நிதமும் நண்பர்கள் தினத்தை கொண்டாடியபடி....

எழுதியவர் : (6-Aug-17, 6:13 pm)
Tanglish : natpu
பார்வை : 63

மேலே