விடியுமா

அலையே அலையே வருவாயே
அங்கே அவனை காண்பாயா,
சிலையாய் நானும் காத்திருக்கும்
சேதி நீயும் சொல்வாயே,
நிலையிலா செல்வம் போதுமென்பாய்
நிம்மதி தரவே வரச்சொல்வாய்,
கலைநிறை வானம் வெளுத்ததுவே
காரிகை யெனக்கு விடியாதோ...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (24-Aug-17, 7:07 am)
பார்வை : 135

மேலே