என் ஒரு நாள்

தூக்கம் கலைந்து கண்திறந்த உடனே
கைபேசி எடுத்து தேடுவேன் அவன் காலை வணக்கம்...
ஏமாற்றம் தான் கிடைக்கும் பயன் இல்லாத அந்த பயன்பாட்டையும்..
என் கைபேசியும் கடிந்து கொள்வேன்...

அலுவலகம் செல்ல நடக்க அரம்பிப்பேன்..
அங்கு வழியில் இறுதியாக என்னை நீ விட்டு சென்ற இடம்...
கடந்து வருவேன் கண்ணீரையும் அவன் நினைவையும்...
அடுத்த நிமிடம் வந்து சேருவேன்...
எனக்காக முதல் முறை நீ காத்திருந்த இடம்...
முதல் முறை உன்னை பார்த்த இடம் ...
நீயும் நானும் ஏதோ பேசி நின்ற இடம்..
அனைத்தையும் கடந்து வருவேன் நடைபிணமாக....

அலுவலகத்தில் என் மேஜை மீது கிடக்கும் தாள்கள்....
அதில் முழுதும் எழுதப்பட்டிருக்கும் உன் பெயர்...
கணினியை செயல் படுத்தினால் அதிலும் வரும் உன் முகம்...
செயலற்று போவேன் நான்...
உணவகம் செல்வேன் ஓரமாய் இடம் தேடி அமர்வேன்...
என்னையே தொலைத்தவள் போல் எதையோ தேடுவேன்..
கை கழுவி திரும்பும் முன் அங்கும் ஒரு போராட்டம் தான்...
எங்கோ யாரோ முனுமுனுக்கும் பாடல் வரிகள்...
உன்னை மட்டும் ஞாபகபடுத்தும்...
எப்படியோ நாள் முடிந்தது என்று..
இருக்கை விட்டு எழுவேன்....

தொடர்வேன் என் நாளின் பயணத்தை தொடர்வண்டியில்
தொடரும் உன் நினைவுகளுடன்.....
களைப்பின் மிகுதியால் கண் மூடுவேன் ஒரு நிமிடம்...
இதோ வருகிறேன் பார் என்று போட்டி போட்டு வரும்...
கண்ணீரும் உன் நினைவுகளும்....
ஒரு நிமிடம் பொறுக்க சொல்லி உணவருந்த போவேன்...
மொட்டை மாடி தனிமையில் கொஞ்சம் இளைப்பாறுவேன்...
என்னை எண்ணா உன்னை எண்ணும் என் சிந்தனை..
நினைத்து சிரித்து கொள்வேன்...
கண்களோ தூங்க சொல்லும் இதயமோ ஏங்க சொல்லும்..
இதயம் வெல்லும் இப்போட்டியில் தோல்வி தாங்காமல்
கண்ணீர் சிந்தும் கண்கள்....
கொல்லும் உன் நினைவுகள் கெஞ்சும் என் வார்த்தைகள்...
அப்படியே தூங்கி விடுவேன்..
முடிந்தது ஒரு நாள்..................

எழுதியவர் : நான் (23-Aug-17, 11:16 pm)
சேர்த்தது : Kavitha
Tanglish : en oru naal
பார்வை : 237

மேலே