விவரிக்க முடியா கணம்

இவ்வுலகில் எவராலும்
விவரிக்க இயலாத கணமென
என் உயிர் உலகை விட்டுப்
பரிப்போகும் இறப்பின் விசித்திர
வாசலையே எண்ணியிருந்தேன்
ஆனால் உன்னைக் கண்ட போது
நான் தெளிவாய் உணர்ந்தேன்
அன்பே
உன் கருவிழிக்குள் நான்
சிறைப்படும் நேரம்
உன் விழிகள் என்னை
இமைக்காது காணும் வேளை
உன் மனது என் காதல் குரலை
இசைக்கும் கணம்
காற்றோடும் என்னோடும்
உன் வாசனை கலக்கையில்
உன் இதழ்கள் என்
இமைகளில் இதழ் பதிக்கத்
தேடும் போது
நான் கேட்கிறேனே
என்னுடைய அனைத்தையும் நான்
உன்னிடத்தில் இழந்துவிட்டேன்
அன்பே
இனி ஒன்றோடு ஒன்றாகி
என் இமையாக நீ ஆகி
வாழ்வோமா என..
அக்கணம் தான் எவராலும்
விவரிக்கப் பட இயலாது என
உணர்ந்தேன் கண்ணே
காதலென்னும் ஒற்றைச்
சொல்லால் கூட

எழுதியவர் : சந்தியா (24-Aug-17, 7:39 pm)
பார்வை : 114

மேலே