மங்கையின் கனவு
கண்மூடி உறங்கினேன் கனவிலே வந்தான்
கண்மணி என்றான் காதலை சொன்னான்
மோகத்தைக் கொண்டொரு முத்தத்தைத் தந்தான்
தாகத்தை தீர்த்து சாய்ந்தான் மடியினிலே
எழுந்த ஆசைகளை இதழிலே தழுவவிட்டு
காணாத இன்பத்தை கனவிலே தந்தான்
மெத்தையில் நானும் மெய்மறந்து உறங்கி
கண்விழித்து பார்த்தேன் காலையில் அவனில்லை
ஆக்கம்:- வேல்பாண்டியன் கோபால்