பெரும் புகழ் வாழ்வு
திருக்குறள்
''''''''''''''''''''''''''''''''''''
அறத்துப்பால்
...............................
கடவுள் வாழ்த்து
குறள்-6
.................................
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்.
கவிதையாய் பொருள்
...............................................
ஐபுலனையும் வெற்றிகொண்டு
ஐக்கியமான ஒருநிலையை
ஒழுக்கமான உயர்வழியாய்
யோகமாய் கொண்டவரை
பின்பற்றி நாம் நடந்தால்
பெரும் புகழ் வாழ்வு எய்தலாமே
வள்ளுவர் சொல்வழியே
வையத்தில் நாம் பெறுவோம்