உன்னை காணாமல் இருந்திருக்கலாம் -3 இந்த உலகம் இயங்கிடுமா

காதலை உணராமல் இருந்திருக்கலாம்
காந்தள் கண்கள் மேல்
இறைவன் படைக்காமல் இருந்திருக்கலாம்
காந்த கன்னிகள் கீழே

அந்த புவிஈர்ப்பு விசையின்றி
இந்த உலகம் இயங்கிடுமா
உன் விழிஈர்ப்பு விசையின்று
என் இதயம் இயங்கிடுமா

அறிந்தே இறைவன்
அவிழ்த்து விட்டான் தேவதைகளை
தேவதைகளின் வரங்கள் சுகமே
அறிந்தே இறைவன்
திறந்துவிட்டான் சித்ரவதைகளை
வதைகளின் வரன்கள் சுகமே

அறிந்தே இறைவன்
அவதரித்துவிட்டான் மன்மதன்களை
மன்மதனும் மமதையும் சுகமே
அறிந்தே இறைவன்
தரித்துவிட்டான் முள்முடியை
முட்களும் ரணமும் சுகமே

அறிந்தே இறைவன்
அலையவிட்டான் அன்பினம்புகளை
அலைவதும் அடைவதும் சுகமே
அறிந்தே இறைவன்
தொலையவிட்டான் இதயங்களை
தொலைத்தலும் தேடலும் சுகமே

அறிந்தும் அறியாமலும்
தெரிந்தும் தெரியாமலும்
புரிந்தும் புரியாமலும்
உணர்ந்தும் உணராமலும்
உயிரணுக்களின் விளையாட்டுக்களில் நானும்
உணர்வுகளின் உயிரோட்டத்தில் என் காதலும்

எழுதியவர் : யாழினி வளன் (30-Aug-17, 8:40 pm)
பார்வை : 295

மேலே