அவசரப்பட்டு விட்டாய் அனிதா கவிஞர் இரா இரவி

அவசரப்பட்டு விட்டாய் அனிதா ! கவிஞர் இரா .இரவி !

தனி ஒரு பெண்ணாய் நீ போராடினாய்
தலைநகரம் சென்று வழக்காடினாய் !

சமூக நீதி காக்க குரல் தந்தாய்
சமுதாயத்தில் விழிப்புணர்வு விதைத்தாய் !

உச்ச நீதி மன்றம் கை விரித்த போது
உன்னிடம் பணம் இருந்தால் !

மறு சீராய்வு மனு போட்டிருப்பாய்
மனுவிற்கு நீதி கிடைத்து இருக்கும் !

சுமை தூக்கும் தொழிலாளியின் மகளானாய்
சுமை மனச்சுமை தாங்காமல் மரித்தாய் !

தாயை இழந்து வளர்ந்த காரணத்தால்தான்
தன்னம்பிக்கை இழந்து விட்டாயோ ?

விலக்கு வரும் வரும் என்று சொல்லியே
வீணடித்தனர் காலத்தை கல்வியை !

அரசியல்வாதிகளின் கபட நாடகத்திற்கு
அப்பாவிப்பெண் நீ பலியானாய் !

நம்ப வைத்து கழுத்தை அறுத்த கதையாக
நம்ப வைத்து உன் கதையை முடித்தனர் !

அனிதாவின் மரணம் தற்கொலையல்ல
அரசியல்வாதிகள் செய்த படுகொலை !

மக்களுக்காகாத்தான் சட்டம் என்பதை
மாண்புமிகு நீதியரசர்கள் புரிந்திட வேண்டும் !

கோடிப்பணம் கொட்டிக் கொடுத்தாலும்
அனிதாவின் உயிர் திரும்ப வருமா ?

ஏழை எளிய கிராமத்து மாணவர்களின் கனவை
எட்டி உதைக்க ஏற்படுத்தப்பட்ட சதியே நீட் !

வாழவேண்டிய வஞ்சியை தற்கொலைக்குத் தள்ளிய
வஞ்சகர்கள் உணரவேண்டும் திருந்த வேண்டும் !

உயிர் காக்க மருத்துவர் ஆக விரும்பியவளின்
உயிரைப் பறித்த கொடியவர்கள் அரசியல்வாதிகள் !

அரசியல்வாதிகளே உங்களின் கீழ்த்தரமான
அரசியல் விளையாட்டை இத்தோடு நிறுத்துங்கள் !

அவசரப்பட்டு விட்டாய் அனிதா வேதனை
அனிதாவோடு முற்றுப்பெறட்டும் தற்கொலை !

எழுதியவர் : கவிஞர் இரா .இரவி (2-Sep-17, 2:59 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 167

மேலே