உனக்காக

வானை முட்டும் மலைகளாயினும் சரி
பாரெங்கும் படர்ந்த கடல்களாயினும் சரி
உனக்காக கடந்திடுவேன் நொடிப்பொழுதினில் அவற்றை!!

வானை அலங்கரிக்கும் நட்சத்திரங்களாயினும் சரி
கடலில் தோன்றிய முத்துக்களாயினும் சரி
நீ கேட்டால் சமர்பிப்பேன் உன் காலடியில் அவற்றை!!

முடிசூடா வீரனாயினும் சரி
முடிவைத் தரும் அசுரனாயினும் சரி
நீ சொன்னால் வென்றுகாட்டுவேன் எமனையும் நான்!!

எழுதியவர் : பூர்ணி கவி (4-Sep-17, 6:27 pm)
Tanglish : unakaaga
பார்வை : 708

மேலே