இடைவெளியில் நிரம்புகிறாய்

என்னோடு
பேசாமல் இருக்கமுடியாது
என்று தெரிந்தும்
மௌனம் சாதிக்கிறாய்

என்னோடு
ஒவ்வொரு நொடியிலும்
கரைந்துபோக
விரும்பும் நீதான்
இடைவெளிகளை
நீளச் செய்கிறாய்

என்னைக் குதற
கோப வார்த்தைகளை
ஏவிவிட்ட பின்பு
கண்ணாடிமுன் நின்று
உன்னையே கடிந்துகொள்கிறாய்

கூட்டத்திலும் தனிமையாய்
தனிமையில் என் நினைவுமாய்
உருகுவது என்று
முடிவெடுத்து விட்டுத்தான்
சண்டையை ஆரம்பிக்கிறாய்
ஒவ்வொரு முறையும்

உன் கோபத்திற்கு
ஒரு கால அட்டவணை
தந்துவிடு
நான் முன்னேற்பாடாய்
காத்திருப்பேன் ஒரு
வெள்ளைக் கொடியோடு !

---மதிபாலன்

எழுதியவர் : மதிபாலன் (4-Sep-17, 6:52 pm)
சேர்த்தது : மதிபாலன்
பார்வை : 2028

மேலே