கல்லூரிக் காதலியின் புலம்பல்

கல்லூரிக் காதலியின் புலம்பல்
கவிதை by : கவிஞர் பூ. சுப்ரமணியன்

உன் உருவை
என் இதயத்தில்
நன்றாக செதுக்கியது
நான்தான் தெரியுமா !

என் விழிகளில்
நிறைந்தவன்
நீதான் தெரியுமா !

உன் மூச்சுக் காற்றை
உணர்ந்து அதிகமாய்
சுவசித்தவள்
நான்தான் தெரியுமா!?

உன்னைப் பற்றி
காதல் கவிதைகளை
கட்டுக் கட்டுகாக
எழுதிக் குவித்தது
நான்தான் தெரியுமா!?

என்னைக் காதலிப்பதாக
எல்லாரிடமும் கூறி
திரிந்துகொண்டு இருக்கிறாய்
என்னைத் தவிர
உனக்குத் தெரியுமா !

என்
விழிகள் இதழ்கள்
துடிப்பதைப் பார்
இதய ஒலியை
கேட்டுப் பார்
உன் பெயரைத்தான்
உச்சரிக்கும் தெரியுமா !

உன்னை நினைத்து
உறங்காத இரவுகள்
நான் தலைசாய்க்கும்
தலையணையைக்
கேட்டுப் பார்
உனக்குத் தெரியும் !

பூ.சுப்ரமணியன்,
பள்ளிக்கரணை, சென்னை

எழுதியவர் : பூ.சுப்ரமணியன் (6-Sep-17, 7:40 pm)
சேர்த்தது : பூ சுப்ரமணியன்
பார்வை : 114

மேலே